மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
அரியலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரம்மங்களை தவிர்த்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதந்தோறும் இரண்டாம், மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடைப்பெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முகம் மட்டும் தெரியும் படியான புகைப்படம் - 04 ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருகை புரிந்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu