ஸ்டான்சாமி கொலை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஸ்டான்சாமி கொலை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் ஸ்டான்சாமி கொலையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் செய்தது.

அரியலூரில் ஸ்டான்சாமி சிறையில் கொலை செய்ததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில், ஸ்டான்சாமி சிறையில் கொலை செய்ததைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் ஒன்றிய செயலாளர் துரை அருணன் தலைமை தாங்கினார்.

அருட்தந்தை ஸ்டோன்சாமி மரணம் திட்டமிட்ட கொலை என்றும், பீமா கோராகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். ஜனநாயக உரிமைகளை பறிக்கும் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக்குழு அருண்பாண்டியன் இதில் ஒன்றியக்குழு தோழர்கள் கிருஷ்ணன், சந்தானம், பாக்கியம், சுப்பிரமணியன், உள்ளிட்ட தோழர்கள் பங்கெடுத்தனர்.

Tags

Next Story
healthcare in ai