/* */

அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு: கலெக்டர் விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணிகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் விண்ணப்பம் செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு: கலெக்டர் விண்ணப்பிக்க அழைப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ்; 'சகி"- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட அலுவலகத்தில் தங்கள் சுயவிவரங்களுடன் 31.12.2021 அன்று மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

பதவி - வழக்குப்பணியாளர் - 1& 2 (Case Worker 1 & 2, பணியிடம் -4, கல்வித்தகுதி - BSW & MSW (Counseling Psychology or Development Management, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், தகுதி -1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.12,000/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.3,000/-

பதவி - பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper), பணியிடம் -1, கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.6,400/-

பதவி - பாதுகாவலர் (Security Guard), பணியிடம் -1, கல்வித்தகுதி - 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி அல்லது தோல்வி, வயது வரம்பு -21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி -நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்;ரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தொகுப்பு ஊதியம்ரூ.10,000/-

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், தரைத்தளம் அறை எண்: 20, மாவட்ட ஆட்சியரக வளாகம், அரியலூர்-621704. முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Dec 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது