/* */

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு செந்துறை நகரில் விழிப்புணர்வு பேரணி

செந்துறை துணை மின்நிலையம் சார்பாக மின்சிக்கன வாரம் கடை பிடிக்கப்படுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு செந்துறை நகரில் விழிப்புணர்வு பேரணி
X

செந்துறை நகரில் மின் சிக்கன வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.


அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அமைந்துள்ள துணை மின் நிலையம் சார்பாக மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி இன்று நடை பெற்றது.

செந்துறை பேருந்துநிலையம் முன்பு விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி உதவி செயற்பொறியாளர் பொன்.சங்கர் கொடியசைத்து துவக்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில் மின்சார சிக்கனம் குறித்து கோஷம் எழுப்பியபடியே பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து நோட்டீசும் வழங்கினர்.

செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிந்த பேரணியில் உதவி மின்பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், மற்றும் பணியாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Dec 2021 12:41 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...