அரியலூர்: 753 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அரியலூர்: 753 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
X

753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 753 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் வாக்களிக்க 355 மையங்களில் 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, 4556 அலுவலர்கள் வாக்கு மையங்களில் பணியாற்றுகின்றனர். இதில் 144 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு துணை ராணுவத்தினருடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியலூர் சட்டமன்றத்தில் பதிமூன்று வேட்பாளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் 13 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து சரியாக ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்னா அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தனது வாக்கை செலுத்தினர். இந்திய ஜனநாயக கட்சி அரியலூர் சட்டமன்ற வேட்பாளர் ஜவஹர் மேலக்குடிகாடு கிராமத்தில் தனது வாக்கை செலுத்தினர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சொர்ணலதா காடுவெட்டி கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சிதம்பரம் தொகுதி எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் அங்கனூர் கிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினார். அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தாமரைக் குளம் கிராமத்தில் தனது வாக்கினை செலுத்தினர்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகை தரும் வாக்காளர்களுக்கு கொரோனா தொற்று பரவலை தடைசெய்யும் பொருட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சனிடைசர் வழங்கப்பட்டு முககவசம் மற்றும் கையுறை வழங்கப்படுகிறது. இதனையடுத்து வட்டமிட்ட இடங்களில் சமூக இடைவெளியுடன் வாக்காளர்கள் நிற்கவைக்கப்பட்டு ஒவ்வொருவராக அனுப்பப்படுகின்றனர். பின்னர் அவர்களின் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டு கையில் அடையாள மை வைத்த விட அவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இம்முறை அனைத்து வாக்காளர்களும் தாங்கள் செலுத்தும் வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் வாக்கு செலுத்தும் இயந்திரத்திற்கு அருகாமையில் வாக்கினை உறுதி செய்யும் இயந்திரத்தில் துண்டு சீட்டில் பதிவுகள் வரப்பெற்று பின்னர் அந்த சீட்டு பெட்டியில் விழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டத்தில் அமைதியான விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.


Updated On: 6 April 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்...
  2. காங்கேயம்
    சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
  3. தாராபுரம்
    குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
  5. திருப்பூர் மாநகர்
    அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
  7. சென்னை
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
  9. அரசியல்
    தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
  10. தொழில்நுட்பம்
    சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்