ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
HIGHLIGHTS
உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தா.பழூர் அடுத்த மதனத்தூர் பேருந்து நிறுத்தத்தில், மண்டல துணை வட்டாட்சியர் கனகராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்வேலியை சேர்ந்த ரத்னாண்டவர் என்பவர் காரில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரது காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார் நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் சுரேஷிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர் தவசீலன், மேகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.