அரியலூரில் இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரில் உதவிஎண் 181, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு வழிகாட்டுதலின் பேரில், வாலாஜாநகரத்தில் பொது மக்கள் மத்தியில் "181,1098 மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, இணைய வழி குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை உமன் ஹெல்ப் டெஸ்க் உதவி எண் 181, 1098 Call, 100 Call குறித்தும், இணையவழி குற்றங்கள், அவைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் உதவி எண் 155260 குறித்தும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன்,உதவி ஆய்வாளர் மணிகண்டன், வாலாஜாநகர் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu