இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள்

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கப்பட்டது.
மேலும், அரியலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சி.ராஜகோபால் தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10,000க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் வழங்கினார். இக்கருவி மூலம் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நபர்களின் சிகிச்சைக்காக சிலிண்டர் இல்லாமல் காற்றிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து, நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் பிற உதவி தேவைப்படும் நபர்களின் வசதிகளுக்காக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதுபோன்ற தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனவும், இந்த ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu