/* */

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற வாரண்ட்

நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காததால் சேர்மன், மண்டல மேலாளர் கிளைமேலாளருக்கு நீதிமன்ற வாரண்ட்.

HIGHLIGHTS

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன சேர்மனுக்கு நீதிமன்ற வாரண்ட்
X

பைல் படம்.

அரியலூர்-செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த 60 விவசாயிகள் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்துள்ளனர். நெல், மக்காச்சோளம், பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மேற்கண்ட நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டு தொகை வழங்காததால், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி ரூ.2000/- நீதிமன்ற செலவு 5000/- என 60 விவசாயிகளுக்கு 9 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் 4 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு கொடுக்காததால் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் சேர்மன், மண்டல மேலாளர் மற்றும் அரியலூர் கிளை மேலாளர் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பித்தது நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 May 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?