/* */

தா.பழூரில் எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி வகுப்பு

தா.பழூர் வட்டாரத்தில் எண்ணும் எழுத்தும் இயக்க பயிற்சியில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

தா.பழூரில் எண்ணும், எழுத்தும் இயக்க பயிற்சி வகுப்பு
X

தா.பழூர் வட்டாரத்தில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.


அரியலூர்- தமிழக முதல்வர் அறிவித்துள்ள எண்ணும் எழுத்தும் இயக்கம் பயிற்சி வகுப்பு தா.பழூரில் நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் 2025-ஆம் ஆண்டுக்குள் முழுமையான இலக்கை அடைய வேண்டி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம் அறிவித்தார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் இயக்கம் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதில் தா.பழூர் வட்டாரத்தில் 45 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்புகள் 6ம் தேதி முதல் தொடங்கி 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார கல்வி அலுவலர் அசோகன் தலைமையில், அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி முன்னிலையில், மேற்பார்வையாளர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சியளித்து வருகின்றனர். ஆசிரியர் பயிற்றுநர் சிவா மற்றும் ஆசிரிய கருத்தாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

Updated On: 6 Jun 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...