சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

சிமெண்ட் ஆலை பைல் படம்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், உத்தேசிக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்தீரணம் - 4.98.5 ஹெக்டேர், புல எண்.பிரிவு. 34, 34/1, 49, 50, 54, 54/26 &.54/27, பெரியநாகலூர் கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் எடுக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பாரி மஹால், திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, தேளூர் மின்சார வாரிய அலுவலகம் எதிர்புறம், தேளுர் கிராமம் - அஞ்சல், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 25.08.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பொது மக்கள் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் பெறலாம். மேலும் பொது மக்கள் தங்களின் கருத்துக்களை கூறலாம். அவை பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக மாநில சுற்றுசசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பினை பெற்றிருக்கும் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu