Begin typing your search above and press return to search.
த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்
கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், த.சோழன்குறிச்சி ஊராட்சியில் 01.05.2022 தொழிலாளர் தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்தாத காரணத்தினால் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுரையின்படி த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் எம்.ரவி என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.