ஜூன் 11- 14ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை டோக்கன் விநியோகம்

ஜூன் 11- 14ம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை டோக்கன் விநியோகம்
X

அரியலூர் கலெக்டர் ரத்னா  (பைல் படம்)

அரியலூர் மாவட்டத்தில் ஜூன் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 4 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் ஆணையிடப்பட்டது.

முதல் தவணையாக ரூ.2000ம், கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தவணை நிவாரணத்தொகை ரூ.2000ம், மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பை பொது விநியோகத்திட்டத்தின் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிடப்பட்டுள்ளர்.

நிவாரணத் தொகை ரூபாய் 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் வருகிற ஜுன் 11-ம் தேதி முதல் 14 தேதி வரை நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரூபாய் 2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பை வருகிற ஜூன் 15-ம் தேதி முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

ரூபாய் 2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பை ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்படும்.

குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற முடியாதவர்கள், எதிர்வரும் மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் கொரோனா நோய் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து, அதாவது தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன்,

சமூகத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்பட்டு, ரூபாய் 2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை பெற்றுச் செல்லுமாறு மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story