/* */

அரியலூர்: கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர்: கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மானாவாரி பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயன்அளிக்கும் என்பதாலும், நெல்சாகுபடி பணியை தொடங்க இம்மழை பெரிதும் உதவும் என்பதாலும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர் நகரில் நேற்று இரவு நல்லமழை பெய்தது. 25.3மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருமானூரில் 1.4மில்லிமீட்டர், ஜெயங்கொண்டத்தில் 5மில்லிமீட்டர், செந்துறையில் 17மில்லிமீட்டர், ஆண்டிமடத்தில் 2மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Updated On: 3 Oct 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?