/* */

போக்சோ வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளச்சாராய வியாபாரிக்கு 11ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

போக்சோ வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
X
தண்டனை அடைந்த ராஜசேகர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கள்ளசாராய வியாபாரி. இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து பெண்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜசேகருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30ஆயிரம் அபராதம் விதித்தும் இன்று தீர்ப்பளித்தார்.

Updated On: 5 Aug 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!