Begin typing your search above and press return to search.
போக்சோ வழக்கில் கள்ளச்சாராய வியாபாரிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளச்சாராய வியாபாரிக்கு 11ஆண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கள்ளசாராய வியாபாரி. இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து பெண்கள் அவசர உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ராஜசேகருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 30ஆயிரம் அபராதம் விதித்தும் இன்று தீர்ப்பளித்தார்.