/* */

ஆசிரியர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை
X

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ. 1 லட்சம் பணம் மற்றும் 23 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் வசிப்பவர் கொளஞ்சியப்பன். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஆசிரியையாக பணிபுரியும் மனைவி ஹேமலதா மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அனைவரும் பல்வேறு வேலையாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.இந்நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ. ஒரு லட்சம் பணம், வளையல், மோதிரம், செயின், தோடு உள்ளிட்ட சுமார் 23 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவஇடம் வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். டிஎஸ்பி தேவராஜ் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மோப்ப நாய் மட்டும் கைரேகை நிபுணர்கள் நிகழ்விடத்தில் முகாமிட்டு தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 1 Feb 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?