/* */

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீரென இறந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு
X

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(57). இவர் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஒரு வருடத்திற்கு மேலாக நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாஸ்கரன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிமென்ட் ஆலைக்கு வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

பின்னர் நேற்று காலை பாஸ்கரன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது ஆலை உள்ளே மயக்கமடைந்தார். பின்னர் ஆலை நிர்வாகத்தினர் மயக்கமடைந்த பாஸ்கரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாஸ்கரனை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் மகன் பிரேம்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமென்ட் ஆலையில் ஊழியர் இறந்த சம்பவம் ஊழியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 25 Feb 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...