/* */

உஷ்.....அப்பாடா.....இன்றுடன் முடிந்தது அக்னிநட்சத்திரம்: நாளை மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

உஷ்.....அப்பாடா.....இன்றுடன் முடிந்தது அக்னிநட்சத்திரம்: நாளை மழை பெய்ய வாய்ப்பு
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. கத்தரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது.பல ஊர்வகளில் வெயில் சுட்டெரித்தது பெரும்பாலான ஊர்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் இன்னும் ஓரி ரு நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 May 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...