/* */

அ.தி.மு.க., விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரும் மனு: உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

அ.தி.மு.க., கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க கோரிய மனு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது.

HIGHLIGHTS

அ.தி.மு.க., விதிகளில் திருத்தத்துக்கு தடை கோரும் மனு: உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
X

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா திடீர் மறைவு, அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து இடைப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பை ஆட்சியில் ஏற்றார். அ.தி.மு.க கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு ஒன்றில், அ.தி.மு.க கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தவுள்ளார்.

Updated On: 21 Jun 2022 8:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்