/* */

நடிகர் ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...

நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...
X

நடிகர் ரஜினிகாந்த். (கோப்பு படம்).

தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்து பின்னர் அந்த கருத்தை மாற்றிக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அதிரடியான கருத்துகளை தெரிவித்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்து உண்டு. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்ட பொது அறிவிப்பு விவரம் வருமாறு:


இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும் மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்பட்டு வருகிறார். திரையுலகம் முழுவதும் அவரது ரசிகர் பட்டாளமும், மரியாதையும் ஒப்பிட முடியாதது மட்டுமின்றி மறுக்கவும் முடியாதது.

அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் என்பது ரஜினிகாந்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில், அவரது பெயர், குரல், படம், புகைப்படம், கேலிச்சித்திரப் படம், கலைப் படம், கணினி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய படம் உள்ளிட்டவற்றை பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாக அவரது கவனத்திற்கு வந்துள்ளது.


பொதுமக்கள் மத்தியில் ரஜினிகாந்தின் தயாரிப்புகளை வாங்குவதற்கும், ரஜினிகாந்தின் தளம் மற்றும் ஊடகத்தை அணுகுவதற்கும் பொதுமக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்துப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் பிளாட் பார்ம்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனித்துவம் வாய்ந்த ரஜினிகாந்தின் படம், பெயர், புகைப்படங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றை அவர் அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது, பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.


எனவே, ரஜினிகாந்த் என்ற ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் அதாவது அவரது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உள்ளிட்டவற்றில் உள்ள உரிமைகள் எதையும், யாராவது மீறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என பொது அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது பெயரை யாரேனும் தவறாக பயன்படுத்திவிடுவார்களோ என்ற அடிப்படையில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நடிகர் ரஜினிகாந்தின் இந்த திடீர் எச்சரிக்கை அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Jan 2023 4:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?