/* */

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
X

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரின் கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில். அதே பகுதியில் வசித்து வரும் முரளி கிருஷ்ணன் என்பவர், மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அப்போது கோயிலில் இருந்த பூசாரி அலறியடித்து வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அப்போது கோயிலில் வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் உளரிய முரளி கிருஷ்ணன், கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கடவுளே வழிபட்டு வருவதாகவும். கடவுள் தனக்கு திருப்பி ஏதும் தரவில்லை என கூறி மது போதையில் உளறியுள்ளார். இது சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த கொத்தவால்சாவடி போலீசார் முரளிகிருஷ்ணணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 10 Nov 2023 7:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?