/* */

குற்றாலம் ஐந்தருவியில் குவிந்தது மக்கள் கூட்டம்...!

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

HIGHLIGHTS

குற்றாலம் ஐந்தருவியில் குவிந்தது மக்கள் கூட்டம்...!
X
குற்றாலத்தில் குவியும் பயணிகள் கூட்டம்.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான சீசன் இதுவரை துவங்கவில்லை.

இந்நிலையில் குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் சிறு சிறு கற்கள் மற்றும் மரத் துண்டுகள் விழுந்தன. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். நள்ளிரவுக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

Updated On: 4 July 2022 10:36 AM GMT

Related News