/* */

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம். மின்தடை ஏற்படுமா?

HIGHLIGHTS

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
X

கோப்பு படம் 

நிலக்கரி தட்டுப்பாட்டால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் விதம், 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டுவரப்பட்டு 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1, 3, 5 ஆகிய யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 3 யூனிட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனல் மின் நிலையத்தில் உள்ள 2 யூனிட்டுகள் மூலம் 420 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 21 April 2022 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்