/* */

விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப கூடுதலாக 600 பஸ்கள் இயக்கம்

பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

விடுமுறை முடிந்து பயணிகள் சென்னை திரும்ப கூடுதலாக 600 பஸ்கள் இயக்கம்
X

கோப்பு படம்

புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு பள்ளி விடுமுறை என தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, சிறப்புப் பேருந்துகளை இயக்குதல் அடிப்படையில் வரும் 01.01.2023 அன்று வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு. சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

இது தவிர கோயம்புத்தூர் , ஈரோடு, புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு, . தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன், கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு இணையதளங்களின் மூலமாக இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது

Updated On: 29 Dec 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு