/* */

சங்கரன் கோவில் அருகே பள்ளி பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

சங்கரன் கோவில் அருகே பள்ளி வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

சங்கரன் கோவில் அருகே பள்ளி பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
X

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் ஒப்பனையால் புறத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி - சங்கரன் கோவில் சாலையில் திருமலாபுரம் என்ற இடத்தில் அவர்களது கார் வந்தபோது அவர்களது கார் தனியார் பள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியவர்கள் ஐந்து பேர் சாலை விபத்தில் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 May 2023 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து