பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் கோரிக்கை

பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் கோரிக்கை
X

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பொது ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் வரும் 16ம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.அதன்படி பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?