பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதி

பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிதி
X

சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியான ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று (பிப் 25 ம் தேதி) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்வி, ஜோதி, சந்திரா, லட்சுமியம்மாள் மற்றும் பொன்னுசாமி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.துயர சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business