Begin typing your search above and press return to search.
நூலகங்களை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் நூலகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புற நூலகங்களை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். வண்டியூரில் புதிதாக திறக்கப்பட்ட நூலகத்தை திறப்பது பற்றி 4 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.