/* */

புத்துணர்வு முகாமுக்கு கிளம்பும் யானைகள்

புத்துணர்வு முகாமுக்கு கிளம்பும் யானைகள்
X

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை முதல் நடைபெறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில், யானைகள் புத்துணர்வு முகாம் நாளை முதல் 48 நாட்கள் நடைபெற உள்ளது. யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதுடன் மட்டுமல்லாது யானை பாகன்களுக்கும் யானையை பராமரிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் முகாமில் வழங்கப்படும்.

இதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜை செய்து லாரி மூலம் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி சிறப்பு பூஜை செய்யப்பட்டு யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவில் யானை கோமதி, யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முன்னதாக யானை கோமதி கோவிலுக்கு வந்தவர்களுக்கு ஆசி வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா இன்று அதிகாலை லாரி மூலம் புத்துணர்வு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோவில் சார்பில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Updated On: 8 Feb 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?