Begin typing your search above and press return to search.
திருவள்ளுவர் தினம்- பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,திருவள்ளுவரின் லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.