பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை: அண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை:  அண்ணாமலை
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் பேட்டியின் போது கூறினார்.

விவசாயிகளின் நண்பன் மோடி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல்லுக்கு வந்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகத்தில் தாசில்தாரில் இருந்து மேலே உள்ள அனைத்து துறைகளிலும் லஞ்சம் லாவண்யம் அதிகமாக உள்ளது அரசியல் முதல் அரசாங்க அலுவலகம் வரை ஊழல் புரையோடி உள்ளது. எங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே கொள்கை ரீதியாக வேறுபாடு உள்ளது.மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்கின்ற காரணத்தினால் தான் பெட்ரோல் டீசல், கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்துவதாக கூறினார். இதனால் மக்கள் பாதிக்கப் படவில்லை என தெரிவித்தார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்