தேர்தல் பணிகளை ஆய்யு செய்ய உயர்நிலைக் குழுவினர் தமிழகம் வருகை

தேர்தல் பணிகளை ஆய்யு செய்ய உயர்நிலைக் குழுவினர் தமிழகம் வருகை
X
தமிழகத்தில் வரும் 2021-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணைய செயலர் தலைமையில் 6 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். அவர்கள் வருமானவரித்துறை மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தேர்தல்முன்னேற்பாடுகள் பணிகளை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் வரும் 2021-ம்ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் (பொது) உமேஷ் சின்கா தலைமையில், துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பிஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச்.ஆர்.வத்சவா, தேர்தல் ஆணைய இயக்குநர் பங்கஜ் வத்சவா, தேர்தல் ஆணைய செயலர் மலேய் மாலிக் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவினர் டிச.21ம் தேதி சென்னை வருகின்றனர்.

முதலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது பரிந்துரைகள், மனுக்களை பெறுகின்றனர். தொடர்ந்து, வருமானவரித் துறை பொறுப்பு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வு செய்கின்றனர்.

மறுநாள் டிச.22-ம் தேதி காலை, தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகின்றனர். தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை நடத்துகின்றனர்.

அடுத்து, பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பு நடைபெறும். அதனை அடுத்து புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டுச் செல்கின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story
ai in future agriculture