ஒரேயொரு தங்கத்தால் கோடிகளில் குளிக்கப்போகும் தங்கமகன் நீரஜ்

ஒரேயொரு தங்கத்தால் கோடிகளில் குளிக்கப்போகும் தங்கமகன் நீரஜ்
X

தங்கம் வென்ற நீரஜ்குமார் வெற்றிச் சிரிப்புடன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ்க்கு ரூ.1 கோடி பரிசினை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

புதுடில்லி:

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புப்படி தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்) பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி பரிசு வழங்கும்.

வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கலம் வென்ற சிந்து, லவ்லினா, பஜ்ரங் பூனியாவுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும். மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai healthcare products