/* */

வெற்றி முனைப்பில் இந்திய அணி

ஆமதாபாத்தில் நாளை நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

HIGHLIGHTS

வெற்றி முனைப்பில் இந்திய அணி
X

நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. இது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி, இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட 20-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சம நிலை ஆனது. மூன்றாவது போட்டி நேற்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியத்தில் நடந்தது.

'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். ரோகித் சர்மா 15 ரன்னிலும், இஷான் கிஷான் 4 ரன்னிலும் வெளியேறினர். ரிஷப் பன்ட் நிதானமாக ஆடி 25 ரன் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் விராத் கோலி சிறப்பாக ஆடினார். அரை சதம் அடித்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. இலகுவான இலக்கை இங்கிலாந்து அணி 18.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது.

நாளைய ஆட்டத்தில் வெல்லும் முனைப்பில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Updated On: 17 March 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை