Vinayagar Mantra-விநாயகர் மந்திரங்கள் கூறினால் வியப்புறும் மாற்றம் வரும்..!

Vinayagar Mantra-விநாயகர் மந்திரங்கள் கூறினால் வியப்புறும் மாற்றம் வரும்..!
X

விநாயகர் (கோப்பு படம்)

விநாயகனை முழுமுதற் கடவுள் என்பார்கள். எல்லா கோவில்களிலும் விநாயகரை வணங்கிவிட்டுத்தான் மற்ற கடவுளர்களை வணங்குதல் செய்கிறோம்.

Vinayagar Mantra

விநாயகரை வழிபடும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைகள் செய்யும் பொழுது உச்சரித்தால் சகல சம்பத்துகளும் கிட்டும் என்பது ஐதீகம்.

Vinayagar Mantra

அதில் குறிப்பாக விநாயகர் 108 போற்றி தினமும் கூறுபவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே இருக்காது என்பார்கள். இவற்றை முழுமையாக மனப்பாடம் செய்து விநாயகரின் அருளைப் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

விநாயகர் காயத்ரி மந்திரம்

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!

Vinayagar Mantra

விநாயகர் துதி

ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா

ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா..

ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா

ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா..

ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா

ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா..

ஓம் கருணாகரனே சரணம் கணேசா

ஓம் சுருதிப் பொருளே சரணம் கணேசா..

ஓம் கலியுக நாதனே சரணம் கணேசா

ஓம் கருணையூற்றே சரணம் கணேசா..

Vinayagar Mantra

ஓம் துயர் துடைப்பவனே சரணம் கணேசா

ஓம் வேத முதல்வனே சரணம் கணேசா..

ஓம் வேதாந்த சாரமே சரணம் கணேசா

ஓம் ஞான மூர்த்தியே சரணம் கணேசா..

ஓம் தோஷம் தீர்ப்பவனே சரணம் கணேசா

ஓம் நவக்கிரஹ நாயகனே சரணம் கணேசா..

ஓம் வினை தீர்க்ககும் வினையாகனே சரணம் கணேசா

ஓம் எங்கும் நிறைந்த இறைவனே சரணம் சரணம் சரணம் கணேசா..!

Vinayagar Mantra

விநாயகர் காயத்ரி மந்திரம்

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமகி

தன்னோ தந்த் ப்ரஜோதயாத்

கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக சிறந்த பலன்களை பெறலாம். அதோடு நமது தோஷங்கள் விலகி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

கணபதி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே

வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

Vinayagar Mantra

விநாயகர் மந்திரம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

கணபதி ஸ்லோகம் 2:

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

கணபதி ஸ்லோகம் 3:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

Vinayagar Mantra

கணபதி ஸ்லோகம் 4:

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

கணபதி ஸ்லோகம் 5:

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே.

Tags

Next Story
ai in future education