/* */

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை

திருப்பூர் அருகே சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் சோழி வைத்து பூஜை செய்ய உத்தரவாகி இருக்கிறது.

HIGHLIGHTS

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் பஞ்சு, சோழி வைத்து பூஜை
X

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டி.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. வேறு எங்குமே இல்லாதவாறு, இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, குறிப்பிட்ட பொருளைக் கூறி, அதை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவார்.

இவ்வாறு கனவில் உத்தரவு பெற்ற பக்தர், கோவிலில் தெரிவிக்க வேண்டும். கோவிலில், சாமி முன்பு பூ போட்டு கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பது வழக்கம். அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை, அந்தப் பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு உத்தரவான பொருள், ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது காலம் காலமாக உள்ள ஐதீகமாகும்.

அவ்வகையில், திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி (வயது 40) என்ற பக்தரின் கனவில், இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகிய பொருட்கள் வைக்க உத்தரவானது. சுவாமியிடம் பூ கேட்டு உத்தரவு கிடைத்ததை அடுத்து, நேற்று முதல் உத்தரவு பெட்டியில், அந்த பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

Updated On: 22 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!