Mahalakshmi Moola Mantra in Tamil-வீட்டில் செல்வம் பெருகணுமா? மகாலட்சுமி மந்திரம் சொல்லுங்க..!

Mahalakshmi Moola Mantra in Tamil-வீட்டில் செல்வம் பெருகணுமா? மகாலட்சுமி மந்திரம் சொல்லுங்க..!

 mahalakshmi mantra in tamil-செல்வத்துக்கான கடவுள் மகாலட்சுமி (கோப்பு படம்)

Mahalakshmi Moola Mantra in Tamil-செல்வம் பெருக வேண்டும் என்பது எல்லோருக்குமே இருக்கும் ஆசை. அதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும். அதுக்கு மகாலட்சுமி மாத்திரம் சொல்லுங்க.

Mahalakshmi Moola Mantra in Tamil

மனுஷனுக்கு எப்போதுமே மனநிம்மதியை கொடுப்பது செல்வ வளம்தான். என்னதான் படிச்சிருந்தாலும் பணம் இல்லைன்னா அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை இருக்காது. செல்வம் இருக்கணும். பணக்காரரோ ஏழையோ யாராக இருந்தாலும் செல்வம் இருக்கணும் என்பதே அவர்களின் ஆசை. செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை யார் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம் செல்வம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் லட்சுமியை வழிபடுகையில் கூறவேண்டிய லக்ஷ்மி மூல மந்திரம் கீழே உள்ளது.

மகாலட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

மகாலட்சுமி தேவிக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த மூல மந்திரத்தை ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் செய்யவேண்டும். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்தை தூய்மை செய்து, பொட்டு வைத்து, மாலையிட்டு, நெய் தீபமேற்றி, சர்க்கரை கலந்த பசும்பால் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

பிறகு இந்த மூல மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வழிபாடு செய்ய வேண்டும். தினமும் காலையில் குறைந்த பட்சம் 16 முறையாவது இந்த லட்சுமி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மந்திர ஜெபக் காலத்தில் கோபப்படுதல், சத்தமாகப் பேசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய மந்திரத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கு மகாலட்சுமியின் கடாட்சம் கிடைத்து செல்வச் சேர்க்கை கூடும். தினசரி மற்றும் மாத வருமானம் பெருகும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகளின் பெருக்கம் உண்டாகும்.

லட்சுமி வழிபாடு

mahalakshmi mantra in tamil-முற்காலங்களில் பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காது. தொடர்ந்து வேறு வேறு இடங்களுக்குச் சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடம் இருக்காது. வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும். அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும்படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே, வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக அமையும்.

லட்சுமி வழிபாட்டிற்குரிய நாட்கள்

செல்வ மகளான ஸ்ரீ லட்சுமி தேவியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதம் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாகும். இந்த தினங்களில் லட்சுமி தேவிக்கு படையல் இட்டு, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் செய்து லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபட்டால் லட்சுமி தேவியின் பூரண அருட் கடாட்சம் கிடைக்கும்.

லட்சுமி மந்திர பலன்கள்

லட்சுமி தேவியை முறையாக பூஜித்து, விரதமிருந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு செல்வ மகளான லட்சுமியின் முழுமையான அருட்பார்வை கிடைக்கிறது. இதனால் வாழ்வில் வளமை பெருகும். செல்வ சேர்க்கை அதிகரிக்கும். வறுமை நிலை நீங்கும். புதிய வீடு, வாகனம் என வாழ்வில் வசதி வாய்ப்புகள் கிடைக்கும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனதிற்கினிய இல்லற வாழ்வு அமையும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீர வழி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். விரும்பியதெல்லாம் நிறைவேறும். மனக்கவலைகள் நீங்கி குறைபாடுகள் இல்லாத வாழ்க்கை அமையும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story