/* */

krishna quotes in tamil-கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் என்னதான் சொல்லியிருக்கார்..! நீங்களே தெரிஞ்சுக்கங்க..!

Krishna Quotes in Tamil-பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் மேன்மையான கருத்துக்களை கூறியுள்ளார். நாம் என்ன செய்தோமோ அதுவே நமது வினைப்பயனாக வரும்.

HIGHLIGHTS

krishna quotes in tamil-கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் என்னதான் சொல்லியிருக்கார்..! நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
X

krishna quotes in tamil-கீதை மொழிகள்.(கோப்பு படம்)

Krishna Quotes in Tamil-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுணனுக்கு அருளிய ஞான அறிவுரையே பகவத் கீதை. நமது மனித வாழ்வு பற்றிய உண்மையான புரிதலை இந்த பகவத் கீதை எனும் புனித நூல் நமக்கு தருகிறது. மனிதன் அனுபவிக்கும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் மிகச்சிறந்த மருந்தாக இந்நூல் திகழ்கிறது.

வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான குழப்பங்களுக்கும் தீர்வாக பகவத் கீதை திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்தது பகவத் கீதை நூல் தான். இத்தகைய ஞானப் பொக்கிஷமாகிய பகவத் கீதை மனிதர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அற்புதமான ஒரு புனித நூலாகும்.

உங்களுக்காக கீதையின் மேற்கோள்கள்...

எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே சமமாக நிறைந்து உள்ளேன். எனக்கு வெறுக்கத்தக்கவன் இல்லை. வேண்டியவன் இல்லை. ஆனால் எவர்கள் பிரேமை கொண்டு பக்தியுடன் என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் காணக்கூடியவனாக இருக்கிறேன்.

(பகவத் கீதை - 9.29)

எவன் என்னை பிறப்பற்றவன், அனாதியானவன், உலகங்களுக்கெல்லாம் தலைவன் என்று தத்துவரீதியாக அறிகிறானோ; மனிதர்களில் மிகவும் அறிவாளியான அவன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுகிறான்.

(பகவத் கீதை - 10.3)

அர்ஜுனா! எந்த பக்தர்கள் என்னை எவ்விதம் வழிபடுகிறார்களோ, நானும் அவர்களை அதற்கேற்பவே அருள் புரிகிறேன். ஏனெனில் எல்லா மனிதர்களும் பல்வேறு விதங்களிலும் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்கள்.

(பகவத் கீதை - 4.11)

எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் எவ்விதம் கருப்பையினால்- தசை கூட்டத்தினால் கரு மறைக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதம் அந்த காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

(கீதை - 3.38)

krishna quotes in tamil

அர்ஜுனா! படைப்புகளின் ஆரம்பமாகவும் முடிவாகவும் நடுவாகவும் நான் தான் இருக்கிறேன். வித்தைகளுள் ஆத்ம வித்தையாவும், தர்க்கம் செய்பவர்களுடைய தத்துவத்தை தீர்மானம் செய்ய உதவும் வாதமாகவும் நானே இருக்கிறேன்.

(கீதை - 10.32)

ரஜோ குணத்திலிருந்து உண்டாகிய இந்த காமம் தான் கோபம் ஆகும். இது பெருந்தீனிக்காரன். 'போதும்' என்ற எண்ணம் இல்லாதவன். மேலும் பெரிய பாவி. இதையே பகைவனாக அறிந்துகொள்.

(கீதை - 3.37)

மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்து இருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத்தூய்மை - இவையெல்லாம் மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.

(கீதை - 17.16)

ஆயிரக்கணக்கான மனிதர்களின் யாரோ ஒருவன் என்னை அடைவதற்காக முயல்கிறான். அவ்விதம் முயல்கின்ற யோகிகளிலும் கூட என்னையே மேலான கதியாக கொண்ட யாரோ ஒருவன் தான் என்னை தத்துவரீதியாக உள்ளபடியே அறிகிறான்.

(கீதை - 7.3)

துக்கத்தைப் போக்குகின்ற யோகம் அளவோடு உண்டு நடமாடுகின்றனவனுக்கும், கர்மங்களில் உரிய முயற்சி செய்கிறவனுக்கும், அளவோடு உறங்கி விழித்து இருப்பவனுக்கு மட்டுமே கைகூடுகிறது.

(பகவத் கீதை - 6.17)

krishna quotes in tamil

எங்கும் வீசுகின்ற பெருங்காற்று எவ்வாறு ஆகாயத்தில் எப்பொழுதும் உள்ளதோ, அவ்வாறே எல்லா உயிரினங்களும் என் சங்கல்பத்தில் உண்டாவதால், என்னிடம் உள்ளன என்று அறிந்துகொள்.

(கீதை - 9.6)

எவன் பக்தியோடு எனக்கு இலை மலர் வைரமுது நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ சுய புத்தியுடன் பலனை எதிர்பார்க்காமல் பிரேமை நிறைந்த அந்த மக்களுடைய பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்ட காணிக்கையாக அதை நான் தைரியத்துடன் அருந்துகிறேன்.

(கீதை - 9.26)

மிகவும் தீய நடத்தை உள்ளவனாய் ஆனாலும் வேறு எதிலும் நாட்டம் இன்றி என் பக்தனாகி என்னை வழிபடுவானேயானால், அவன் சாது என்றே கருதப்படத்தக்கவன். ஏனெனில் அவன் பகவானை பூஜைப்பதைக் காட்டிலும் சிறந்தது வேறு இல்லை என்ற நல்ல தீர்மானத்திற்கு வந்தவன்.

(பகவத் கீதை - 9.30)

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, அகங்காரம் அற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான். அதாவது அவனே சாந்தியைப் பெறுகிறான்.

(கீதை - 2.71)

மனதைத் தன் வசப்படுத்திய யோகி, இவ்விதம் ஆத்மாவை இடையறாது பரமேசுவரனாகிய என்னுடைய சொரூபத்தில் இணைத்துக் கொண்டு என்னிடம் விளங்குகின்ற பரமானந்த நிலையாகிய அமைதியை அடைகிறான்.

(கீதை - 6.15)

krishna quotes in tamil

படிப்படியாகப் பயின்று மனதை உலகியலில் இருந்து ஒதுக்கச் செய்ய வேண்டும். உறுதி பூண்ட புத்தியினால் மனதைப் பரமாத்மாவிடம் நிலைபெறச் செய்து, பரமாத்மாவை தவிர வேறு எதையும் நினையாதிருக்க வேண்டும்..!

சுய அழிவு மற்றும் நரகத்திற்கு மூன்று வாயில்கள் உள்ளன: காமம், கோபம் மற்றும் பேராசை..!

ஒரு மனிதன் தனது நம்பிக்கைகளால் உருவாக்கப்படுகிறான். அவர் நம்புவது போல. எனவே அவர் ஆகிறார்..!

உங்கள் கடமையைச் செய்து உங்கள் விதியை வடிவமைக்கவும். அதுவே வாழ்க்கையின் ரகசியம். ஓ மனிதனே..! உங்கள் சொந்த கைகள் உங்கள் சொந்த விதியை வைத்திருக்கின்றன.- ஸ்ரீ கிருஷ்ணர்..!

மகிழ்ச்சி என்பது மனதின் நிலை, அது வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை..!

எல்லா வகையான கொலையாளிகளிடையேயும், நேரம் இறுதியானது, ஏனென்றால் நேரம் எல்லாவற்றையும் கொல்கிறது...!

நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஈகோவுடன் அல்ல, காமத்தோடு அல்ல, பொறாமையுடன் அல்ல, அன்பு, இரக்கம், பணிவு, பக்தி ஆகியவற்றால்..!

krishna quotes in tamil

மகிழ்ச்சியின் திறவுகோல் ஆசைகளை குறைப்பதாகும்..!

உங்கள் கட்டாய கடமையைச் செய்யுங்கள், ஏனென்றால் செயலற்ற தன்மையை விட நடவடிக்கை உண்மையில் சிறந்தது..!

என்ன நடந்தாலும் நல்லது. என்ன நடக்கிறது என்பது நன்றாக நடக்கிறது. என்ன நடந்தாலும் நல்லது. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்க..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 10 Sep 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...