இந்து மதத்தின் பிரபஞ்ச ரகசியம் : நாசா வெளியிட்ட படங்கள்..!

இந்து மதத்தின் பிரபஞ்ச ரகசியம் :  நாசா வெளியிட்ட படங்கள்..!

பிரபஞ்சம் 

இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள பிரபஞ்ச ரகசியம் நாசா வெளியிட்ட படங்களுடன் ஒத்துப்போகிறது.

சந்திர மண்டலம், செவ்வாய் மண்டலம் என்று விண்வெளியில் பாய்ந்து செல்லும் ராக்கெட்கள் இல்லாத காலத்தில் குறிப்பாக தொலைநோக்கி எனும் டெலஸ்கோப் இல்லாத காலத்திலேயே திருவெண்பா பாடல் எழுதிய மாணிக்கவாசகர் எப்படித்தான் பாடினாரோ தெரியவில்லை "ஆதியும் அந்தமும் இல்லாத அருள் பெரும் ஜோதியே" என்று.

நமது ஆன்மீக வான சாஸ்திரம் தெள்ளத் தெளிவாக இந்த பிரபஞ்ச ரகசியங்களை பலவிதமான கருத்துக்களோடு சிறப்பாக நமக்கு பதிவு செய்துள்ளது.

ஆனால் நவீனம் என்கின்ற போர்வையில் அறிவியல் விஞ்ஞானத்தை கசக்கி பிழிந்து எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் நமக்கு பதிவு செய்யாமல்...

நமது ஜோதிட வான சாஸ்திரம் கூறியதை ரிப்பீட் செய்து அதாவது ஆம் என்று ஒத்துக்கொள்கிறது... இதுதான் உண்மை... இதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.

இதற்காக பல ஆயிரம் கோடிக் கணக்கான பணத்தை செலவு செய்தும் பல லட்சம் அறிவியல் விஞ்ஞானிகளின் உழைப்பை ஏன் விரயம் செய்ய வேண்டும் என்று கூட சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது. அதாவது கண்டறிந்து பதிவு செய்த வானசாஸ்திர உண்மையை ஒத்துக் கொள்வதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்றும் பலர் கேட்கின்றனர்.

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று நமது ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் அறிவியல் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது. அணுக்களால் ஆனது உலகம் என்று... இதைத்தானே நமது ஆன்மீகத்தில் அணுவினுக்குள் அணுவாய் ஆன சிவமே என்று போற்றிப் புகழ்ந்து வணங்கி வருகின்றனர்.

இதை நம்ப மறுக்கிறது நாத்திக விஞ்ஞானம்....!

நவீன வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் இவர்களாக ஒரு அனுமான கருத்தை பதிவு செய்துள்ளார்கள் அதாவது....13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக நவீனவிஞ்ஞானம் கூறுகிறது.

அமெரிக்காவின் நாசா புதிய பிரபஞ்ச படங்களை வெளியிட்டுள்ளது, இதுவரை ஒரே ஒரு அண்டத்தை அதாவது பால்வெளி எனும் ஒரே ஒரு அண்டத்தை மட்டும் வெளியிட்ட நாசா இப்பொழுது சக்திவாய்ந்த தொலைநோக்கி வழியாக 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை படத்தை வெளியிட்டுள்ளது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் ஒரு தொலைநோக்கியினை நிறுத்தி 4 அண்டங்கள் தெரியுமாறு ஒரு படத்தை எடுத்துள்ளது மானிட விஞ்ஞானம் . இது 1960களில் அவர்கள் சொன்ன விஞ்ஞான கருத்தை மாற்றுகின்றது, முதலில் பால்வெளி அல்லது ஆகாய கங்கை என்றொரு அண்டத்தை மட்டும் சொன்னவர்கள் இப்பொழுது கூடுதல் அண்டம் உண்டு என்கின்றார்கள்.

இதை என்றோ சொன்ன மதம் இந்துமதம். இந்து மதத்தில் 1008 ஜீவ அண்டம் உண்டு என என்றோ சொன்னவர்கள் இந்துக்கள். இன்னொரு பூமி என்றோ இன்னொரு கிரகம் என்றோ கூட சொல்லாமல் அன்றே 1008 ஜீவ அண்டம் என்றார்கள். ஜீவ அண்டம் என்றால் உயிர்கள் வாழ தகுதியான அண்டம். இது போக இன்னும் சூட்சுமமாக ஏகபட்ட அண்டம் உண்டு என சொன்னது இந்துமதம். கண்ணனின் விஸ்வரூப தரிசனம் என்பதும் சிவனின் விஸ்வேஸ்வர தரிசனம் என்பதும் இந்த பிரமாண்ட பிரபஞ்ச வடிவமே, காசி விஸ்வநாதன் என்பது விஸ்வ எனும் பெரும் வடிவத்தின் பெயரே. நாசா வெளியிட்ட படங்களை காணும் பொழுது, பாசுரங்களின் வரி நினைவுக்கு வருகின்றது

"பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ

பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்" எனும் வரி அது

அப்படியே சூரபத்மனும் இதர அசுரர்களும் அண்டம் தாண்டி சென்ற காட்சியும் நினைவுக்கு வருகின்றது. இந்த அண்டங்களெல்லாம் நிரந்தரமாக இருப்பவை அல்ல. அவை நாசாவின் படத்தில் நிலையானதாக தோன்றலாமே தவிர எல்லாமே சுழன்று கொண்டிருப்பவை, எல்லாமே அசைபவை. அந்த அசைவுதான் நடராஜரின் நடனமாக இந்துக்களால் சொல்லப்படுகின்றது. அந்த வெளிச்சமும் இருளும் ஒரு கருநீல நிறத்தை பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் அதைத்தான் "கண்ணன் மேனி கரு நீலம்" என்றார்கள். சிவன் விஷத்தை உண்டதால் மேனி நீலமாயிற்று என்றார்கள், அன்னையின் மேனி நீலம் என்றும் அவளை நீலவேணி என்றும் அழைத்தார்கள். நாசாவின் படம் திருமூலரின் பாடல்களையும் நினைவுறுத்துகின்றது, இம்மாதிரியான பாடல்கள் நினைவுக்கு வருகின்றது

"நின்றது அண்டமும் நீளும் புவியெலாம்

நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட

நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்

நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்

நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்

பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்

ஆரண மாய்உல காயமர்ந் தானே "

இந்துக்கள் என்றோ சொன்ன பெரும் மண்டபத்தின் ஒரு படியில் கால் வைத்திருக்கின்றது விஞ்ஞானம். எல்லா படிகளையும் கடந்து அந்த பிரமாண்ட மண்டத்தை அளந்து முடித்திருக்கும் இந்துமதம் விஞ்ஞானத்தை நோக்கி சிரிக்கின்றது .இன்னும் பல நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் இன்னும் வளரலாம். வளர்ந்து இந்த பிரபஞ்சத்தை ஓரளவு அறியும்பொழுதே அது இந்துமதத்திடம் முழுக்க சரணடையும். பிரபஞ்சத்தில் பால்போல் தெரியும் அந்த அண்டத்தை நோக்கும் பொழுது "திருபாற்கடலில் பள்ளி கொண்டாயே" எனும் வரி காதோரம் ஒலிக்கின்றது.

ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் மின்னும்பொழுது ஆதிஷேஷனுக்கு ஆயிரம் தலைகள் உண்டு. அவற்றில் மாணிக்கமும் வைரமும் மின்னும் என இந்துக்கள் சொன்னதும் அது சரியாக இங்கு பொருந்துவதும் ஆச்சரியமானது என்று வலைதளச் செய்தி பதிவு செய்துள்ளது. நமது இந்து வான சாஸ்திர ஜோதிட நுட்ப ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை, முழுமையானவை என்பதை இன்றளவும் ஒத்துக்கொள்ள மறுத்து வருகிறது.

நாத்திகம் பேசும் பகுத்தறிவு கூட்டம். இவர்களை நாம் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது அதனுடன் சேர்ந்து ஆச்சரியமும் ஏற்படுகிறது. மேலைநாட்டவன் நமது சாஸ்திர ஜோதிட விஞ்ஞானத்தை ஆய்வு செய்து ஒத்துக் கொண்டான். ஆனால் இங்கே பிறந்து இங்கே வளர்ந்து இங்கே மடிய போகும் பாமர பகுத்தறிவாதிகள் என்ன காரணத்தாலோ இந்த புண்ணிய பூமியின் புனிதத்தை புரிந்து கொள்ள மறுத்து வருகிறார்கள் என்பதை விட வெறுத்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை!

Tags

Next Story