/* */

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறும்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது

HIGHLIGHTS

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறும்
X

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று 19-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக இந்த கூட்டத்தொடர் 19 நாட்கள் நடைபெறும்.

மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் காலை 11 மணி அளவில் தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து உறுப்பினர்களும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம் என ஏற்கனவே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

அவை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் 311 மக்களவை உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில உறுப்பினர்கள் கொரோனா அறிகுறி இருந்ததாலும், மருத்துவ காரணங்களாலும் தடுப்பூசி இன்னும் செலுத்தி கொள்ளவில்லை. அதே போல் நாடாளுமன்ற ஊழியர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த நேற்று 18-ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட தொடரில் மத்திய அரசு 29 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூட உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Updated On: 19 July 2021 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்