மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க காரில் அதிமுக கொடியுடன் சசிகலா
மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க சசிகலா அப்பல்லோவுக்கு வருகை புரிந்தார்.மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியேறி புறப்பட்டுச் சென்றார்
HIGHLIGHTS
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மதுசூதனனின் உடல்நிலையில் பின்னடவு ஏற்பட்டு அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க அதிமுக கொடியுடன் காரில் சசிகலா அப்பல்லோவுக்கு வருகை புரிந்தார். அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியேறி, புறப்பட்டுச் சென்றார். கட்சியை வழிநடத்துவேன் என கூறிய நிலையில் சசிகலா நலம் விசாரிக்க வருகை தந்துள்ளார்.
மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் சசிகலா கேட்டறிந்தார். இது குறித்து சசிகலா செய்தியாளர்களிடம் பேசும் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க வந்தேன்..
மதுசூதனன் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டிகொண்டு, அவரின் உறவினரிடம் நலம் விசாரித்தேன், அவரையும் சந்தித்து பேசினேன்.
அதே போல முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியேறி, புறப்பட்டுச் சென்று விட்டார்.