நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம்-மத்திய நிதியமைச்சர்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் -ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்களை கடந்து சென்று கொண்டிருக்க கூடிய நிலையில், இந்த விலையேற்றத்துக்கு காங்கிரஸ் தான் காரணம். விலை உயர்வு இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் பத்திரங்கள் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக உலக எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூறுகள் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம் என்றும் குறிப்பிட்டார். இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu