/* */

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை
X

சுப்பரீம் கோர்ட் (பைல் படம்)

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. பெகாசஸ் தொடர்பாக பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. அரசியல் கட்சியினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் மனுக்களை உச்சநீதிமன்றம் அடுத்தவாரம் விசாரிக்கிறது.

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரிக்கும், என்.எஸ்.ஓ., குழுமம் நிறுவனத்தில் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதம் மற்றும் கொடூர குற்றங்களை தடுப்பதற்காகவே பல நாடுகளுக்கு எங்கள் மென்பொருளை விற்பனை செய்கிறோம்.

இந்த மென்பொருளை ஒரு நாட்டின் அரசு குறிப்பிடும் விசாரணை அமைப்பு களுக்கு மட்டுமே தருகிறோம். எங்கள் செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானவை.பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையில்லை. இஸ்ரேல் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யான செய்தி என்பது, விசாரணையில் தெரியவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 30 July 2021 6:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்