நடிகை நக்மாவின் அதிருப்திக்கு ப.சிதம்பரம் காரணமா?
மாநிலங்களவை எம்.பி. பதவி குறித்து நடிகை நக்மா அதிருப்தி தெரிவித்த நிலையில், அதற்கு நான் பொறுப்பல்ல என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இருந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனுவை, முன்னாள் நிதி அமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் என்று தாக்கல் செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களுக்கு ப. சிதம்பரம் அளித்த பேட்டி:
மாநிலங்களவை தேர்தல் தொடர்பாக, நடிகை நக்மா மற்றும் பவன் கெஹ்ரா உள்ளிட்டோர் அதிருப்திக்கு நான் பொறுப்பல்ல. இந்த விஷயத்தில் கட்சித் தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதைதான் நான் செய்ய வேண்டும்.
பிரதமரின் சென்னை நிகழ்ச்சி தொடர்பாக, திமுகவை பாஜக விமர்சனம் செய்வது தவறானது. முதலமைச்சர் மாநிலத்தின் தேவையையும் கோரிக்கையும் பிரதமரிடம் எடுத்துரைத்தார். பிரதமர் மத்திய அரசின் சாதனை குறித்து பேசினார்; முதலமைச்சர் தமிழகத்தின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார். இருவர் பேசியதும் தவறானதல்ல. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.