/* */

துரை வைகோவிற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு

திருச்சி மற்றும் திருவெறும்பூரில் துரை வைகோவிற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

துரை வைகோவிற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு
X

திருச்சி நாடாளுமன்ற தெகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம் செய்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி, கிழக்கு மாநகரம்திருவெறும்பூர் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரப்புரை மேற்கொண்டார்

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணியின் மறுமலர்ச்சி திமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம், திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபட்டார்.

திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமையில் பகுதி கழக செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரை வைகோவிற்கு ஆதரவாக தீப்பெட்டி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‌.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி பேசியதாவது:-

எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி . இந்த திராவிடமாடல்ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர்.

இந்தியா கூட்டணி வெற்றிபெறும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

பெண்கள் தான் நாட்டின் கண்கள் என தமிழக முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான். ராகுல் காந்தியும் நமது தமிழக முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகிறார்கள். எனவே மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைத்து நிறைவேற்ற முடியும்.

இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வைக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல். அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளான, சமத்துவநாளில் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது. எனவே மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து நாம் வாங்கும் 500 ரூபாய் சிலிண்டரை அடுப்பில் பற்ற வைக்க வேண்டும் என்றால் அதற்கு தீப்பெட்டி ஆகிய நமது சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன்,தொகுதி பொறுப்பாளர் மறைமலை, தேர்தல் பகுதி பொறுப்பாளர் தனசேகர், மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், கோவிந்தராஜ், ரெக்ஸ், வட்டக் கழகச் செயலாளர்கள் திருமாறன், செல்வராஜ், அருண்,வி.பி‌ கருணா, குணாநிதி,அப்புகருணாநிதி, மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 14 April 2024 3:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  10. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!