/* */

நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் தான் போட்டி: துரை வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் தான் ம.தி.மு.க. போட்டியிடும் என துரை வைகோ கூறினார்.

HIGHLIGHTS

நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் தான் போட்டி: துரை வைகோ
X

துரை வைகோ பம்பரம் சின்னத்துடன்.

திருச்சியில் இன்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்கவேண்டும். அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கிசென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்துகிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு 2. 70 லட்சம் கோடிரூபாயை இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துக்கொண்டே வருகிறது.

காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தானாக முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பயிரிடப்பட்டுள்ள குறுவை கருகியநிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக உயர்த்திவழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன்உரிய பேச்சுவார்த்தை நடத்தி கொடுக்கும் சீட்டின் அடிப்படையில் எப்போதும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒரே கொள்கையில் இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்றநோக்கத்திற்காக கூட்டணியில் உள்ள அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மைமக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாதெரியும்.

இவ்வாறு துரை வைகோ கூறினார்

Updated On: 17 Oct 2023 4:42 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு