/* */

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக மோதல்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வந்ததால் மோதல் ஏற்பட்டது.

HIGHLIGHTS

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது திமுக- அதிமுக மோதல்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்நாள் அமைச்சர் சேகர்பாபு.

வட சென்னை தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வந்தது யார் என்பது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக என கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

இதன்படி இன்று மதிய வேளையில், அதிமுக சார்பில் வட சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராயபுரம் மனோ வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதேபோல், திமுக சார்பில் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்திருந்தனர்.

அப்போது இருவரும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர். இதனால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்று வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், திமுகவின் அமைச்சர் சேகர்பாபுவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. முதலில் வந்தது அதிமுகதான் என தேர்தல் அதிகாரி கூறியும் சேகர் பாபு ஏற்க மறுத்து வாக்கு வாதம் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து பேசி சமாதானம் செய்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Updated On: 25 March 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்