/* */

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் 5000 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னையில் பாஜக பேரணி: அண்ணாமலை உள்பட 5000 பேர் மீது வழக்கு
X

கோப்பு படம் 

தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில், சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று கோட்டையை நோக்கி பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டா்கள் என, பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க.வினர் கோட்டையை நோக்கி சென்றனர். அவர்களை, தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினா். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சூழலில், நேற்று பேரணி நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து உள்ளனா். சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Updated On: 1 Jun 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...