/* */

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டி

பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டி
X

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினெட்டாவது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழக முழுவதும் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பில் சுணக்கம் காரணமாக முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 28ஆம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 30 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய ஆளும் கட்சியும், தமிழகத்தில் மூன்றாவது அணியாகவும் உள்ள பாரதிய ஜனதாவும் முதலாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

அதில் மத்திய சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சென்னையில் இளைஞர் தலைவர் வினோஜ் பி செல்வம், வேலூர் தொகுதியில் டாக்டர் ஏசி சண்முகம், கிருஷ்ணகிரி தொகுதியில் சி நரசிம்மன், நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல் முருகன் கோயமுத்தூர் தொகுதியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக பாரதிய ஜனதாவிற்கு புத்துயிர் ஊட்டியிருப்பவர் கே. அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் கோவையில் போட்டியிடுவது தமிழக முழுவதும் உள்ள பா.ஜ.க.வினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலையின் வேகம் செயல்பாடுகள் தி.மு.க. அதிமுக ஆகிய கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Updated On: 21 March 2024 1:48 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  8. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  10. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்