/* */

சிதம்பரம் கோவில் விவகாரம்: அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

ஒரு சமயத்தாரை மட்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் திமுக அரசின் காரியங்களைக் கண்டு பாஜக அமைதியாக இருக்காது என்று, அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சிதம்பரம் கோவில் விவகாரம்: அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
X

சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு சென்றனர். அவர்களின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மே 23-ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள்.

கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை?

தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு, தமிழக பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று எச்சரித்துள்ளார்.

Updated On: 7 Jun 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!